×

காட்டு மாடு தாக்கி வேட்டை தடுப்பு காவலர் காயம்

 

பந்தலூர், மே 1: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெலாக்கோட்டை புலிகள் காப்பக வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணிப்புரிந்து வரும் விலங்கூர் கொட்டாய்மேடு பகுதியை சேர்ந்த வெள்ளன் (33) என்பவர் நேற்று காலை வனச்சரகத்திற்குட்பட்ட பென்னை பகுதிக்கு பணிக்கு சென்ற போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு மாடு ஒன்று எதிர்பாராதவிதமாக தாக்கியது.

இதில் வெள்ளனின் வலது பக்க தொடையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காயம் அடைந்தவரை மீட்டு நெலாக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் முதலுதவி அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் கூடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

The post காட்டு மாடு தாக்கி வேட்டை தடுப்பு காவலர் காயம் appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Vellan ,Vilangur Kottaimedu ,Nelakottai Tiger Reserve ,Nilgiris ,Pennai ,
× RELATED பந்தலூர் கருமாரியம்மன் கோவில்...